தடை உத்தரவு பிறப்பிப்பு... எதிர்கட்சிகள் பேரணியில் சிக்கல் ஏற்படுமா?

புதுடில்லி: சிக்கல் ஏற்படுமா? டெல்லி நாடாளுமன்ற சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணியில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லியில் உள்ள பார்லிமென்ட் சாலையில் பார்லிமென்ட் முதல் அமலாக்க இயக்குனரக அலுவலகம் வரை 18 கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்கட்சி பேரணி சென்றால் தடுக்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.