புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஜூன் 27 ...தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை : புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வரும் ஜூன் 27 ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. புதிய நிறுவனங்கள் தொடங்குவது மட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய விவாதங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற இருக்கும் இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், தமிழகத்தில் புதிய கொள்கைகளை அமலுக்கு கொண்டுவருவது தொடர்பாக முடிவெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்ட அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து விரைவில் முடிக்கும்படி அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது மட்டுமல்லாமல் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது குறித்தும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.