கொடைக்கானல் மலர் கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு


கொடைக்கானல் : சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்க்கும் கொடைக்கானலுக்கு கோடைகாலத்தில் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கமான. சுற்றுலா பயணிகளை கவர கோடை சீசனில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும்.

அந்த வகையில் மலர் கண்காட்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிவர்.

இந்த நிலையில் கொடைக்கானலில் கடந்த 26 -ம் தேதி மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடத்தப்பட்ட மலர் கண்காட்சியானது நேற்றுடன் நிறைவடைய வேண்டிய நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து மேலும் மலர் கண்காட்சியை நீட்டிக்க திட்டமிடப்பட்ட நிலையில் நாளை வரை மலர் கண்காட்சி நடைபெறும் என தோட்டக்கலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் 2 நாட்கள் மட்டுமே மலர் கண்காட்சி நடந்த நிலையில் , இந்தாண்டு ஐந்து நாட்கள் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.