சட்ட திட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை... குற்றங்களைக் குறைப்பதற்காக சட்டதிட்டங்களைக் கடுமையாக்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடந்த-50 வருடங்களாக மரண தண்டனை
நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனை மீண்டும் நடைமுறைப்படுத்துவது என்பது
ஓரிரு நாட்களுக்குள் செய்து முடிக்கக் கூடிய காரியம் கிடையாது.
அமைச்சரவை
முதலில் அங்கீகாரம் வழங்க வேண்டும். பின்னர் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்
பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு சில காலம் தேவைப்படும். எவ்வாறாயினும்
இதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் அவர்
தெரிவித்தார்.