வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை

இனிமேல் அபராதம்தான்... கொழும்பில் வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக நாளை முதல் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பிரிவு இயக்குனரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் நபர்களை கண்காணிப்பதற்காக விமானப்படையின் ஆதரவு பெற்றுக் கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய வீதி ஒழுங்கு சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தல், அல்லது அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.