விமானத்தில் பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

கொச்சி: விமான பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை... கொச்சியில் இருந்து பெங்களூரு வழியாக போபாலுக்கு சென்ற ஏர் ஏசிய விமானத்தில், 21 வயது பெண் பணியாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவளித்த பயணியை, போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு விமானநிலையத்தில் பயணிகள் இறங்கும்போது விமானத்தின் பின் இருக்கைக்கு அருகே நின்று கொண்டிருந்த பெண் ஊழியரிடம், பின்புறத்தில் வந்து பயணி ஒருவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான்.

இதையடுத்து, சக பயணிகள் உதவியுடன் பெண் ஊழியர் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவரும் சிஜின் என்ற அந்த நபரை கைதுசெய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.