பேண்ட் பாக்கெட்டில் வைத்து பாம்புக்குட்டிகளை கடத்த முயன்ற நபர் கைது

சீனா: பாம்பு குட்டிகளை கடத்த முயன்றவர்... சீனாவில் 14 பாம்பு குட்டிகளை பேண்ட் பாக்கெட்டில் வைத்து கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

சீனா - ஹாங்காங் எல்லையில் அமைந்துள்ள ஃபுடியன் துறைமுகத்தின் நுழைவாயிலில் சந்தேகத்திற்கிடமான வகையில் பதற்றத்துடன் நடந்து வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில், காலுறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 குட்டி பாம்புகள் சிக்கின.

இதையடுத்து அந்த நபரை கைது செய்த அதிகாரிகள் பாம்புகளை பறிமுதல் செய்தனர். அதில் அழிவின் விளிம்பில் உள்ள 3 மலைப்பாம்பு குட்டிகளும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.