எம்.டி. நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் வந்தது

இலங்கை கடற்பரப்பில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை - சங்கமன்கண்டி இறங்குதுறையிலிருந்து 38 கடல்மைல் தூரத்தில் தீப்பற்றியுள்ள எம்.டி. நியூ டயமண்ட் என்ற எண்ணெய் கப்பலில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா கடலோர காவல்படை பிரிவு இந்த தகவலை அறிவித்துள்ளது.



இந்தியா கடலோர காவல்படை மற்றும் இலங்கை கப்பல்கள் மற்றும் விமானங்களின் பாரிய தீயணைப்பு முயற்சிகளுக்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை சங்கமன்கண்டி இறங்குதுறையிலிருந்து 38 கடல்மைல் தூரத்தில் கிழக்கு பகுதியில் ஈராக்கிலிருந்து இந்தியா நோக்கிச் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பலொன்று வியாழக்கிழமை காலை தீப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.