பண்ணை பசுமைக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்க நடவடிக்கை

பெரிய வெங்காயம் விலை உயர்ந்துவரும் சூழலில் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனையடுத்து, மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பெரிய வெங்காயத்தை பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பெரிய வெங்காயம் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படும். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.