அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை .. அமைச்சர் மனோ தங்கராஜ்


சென்னை: சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி விமர்சித்து பேசியிருந்தார். இதையடுத்து அவர் கூறுகையில், சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதனை தூது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டியில், சனாதனம் என்றால் என்ன? அது என்ன சொல்கிறது என்பது குறித்து விளக்க பாஜகவினர் தயாராக உள்ளனரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்தவித தவறும் இல்லை; பாஜகவினர் ஹிட்லர் போன்று முசோலினி போன்று பொய்யையே திரும்ப திரும்ப கூறி, மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கும் சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்து சமூகத்தை அவர்கள் நேசிக்கவும் இல்லை, அதை உயர்த்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கார்ப்பரேட்-ஐ வாழ வைக்கும் ஒரு கட்சி, வாக்கு வங்கிக்கு மட்டுமே மதத்தை பயன்படுத்தி வருகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.