இந்திய- இலங்கை போக்குவரத்து தாமதாகும் என அமைச்சர் நிமல் சிறிபால தகவல்

கொழும்பு: படகு போக்குவரத்து தாமதமாகும்... இந்தியா-இலங்கை இடையே படகு போக்குவரத்து மேலும் தாமதமாகும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தியா-இலங்கை படகு போக்குவரத்து இரு நாட்டு மக்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைக்கு கடந்த ஏப்ரல் மாதம் படகு சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது அப்படித் தொடங்கவில்லை.

இரு நாடுகளுக்குமிடையிலான படகு போக்குவரத்து ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பில் தெரிவித்தார்.

இந்தியா தனது விருப்பமான துறைமுகத்தை படகு சேவைக்கு மாற்றியதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தின் புதிய துறைமுகத்தை தேர்வு செய்துள்ள இந்திய அதிகாரிகள், அங்கு வசதிகளை அதிகரிக்க இன்னும் சில நாட்கள் தேவை என்று கூறியுள்ளனர்.