அதிகளவில் பழங்காலப் பொருட்களை சேகரித்தவர்

பழங்கால பொருட்கள்... புதுவை அரசின் சுகாதாரத்துறையில் சுகாதார உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் அய்யனார்.

பழங்கால பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் 1000-க்கும் அதிகமான பழங்கால பொருட்களை புதுவை சாமிபிள்ளைதோட்டத்தில் உள்ள தனது வீட்டில் அவர் சேகரித்து வைத்துள்ளார். இந்த பணியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறான பொருட்களை சேகரித்து வந்துள்ளார்.

அந்த வகையில் வெண்கலம், பித்தளை, செம்பு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்ட செம்பு, டம்ளர், பாத்திரங்கள், பூஜை பொருட்கள், பானைகள், எடைக்கற்கள், மரக்கால் என வித விதமான பொருட்கள் காணப்படுகின்றன.