புதுச்சேரியில் தேசிய பெண் குழந்தைகள் தினம்

புதுச்சேரி: தேசிய பெண் குழந்தைகள் தினம்... புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் கம்பன் கலையரங்கில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடந்தது.

துறை இயக்குனர் முத்துமீனா வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தீனி ஜெயக்குமார், கென்னடி எம்.எல்.ஏ., நலத்துறை செயலாளர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. செல்வமாலா சேமிப்புத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்குச் செலுத்தி அரசின் பராமரிப்பில் உள்ள 47 குழந்தைகளுக்கு தபால் புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

துறை இணை இயக்குனர் அமுதா நன்றி கூறினார். இதில் திரளான மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.