நியமனக் கடிதம் பெற்றார்... மட்டக்களப்பின் புதிய மாவட்டச் செயலாளராக கே.கருணாகரன் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவர் அதற்கான அமைச்சரவை நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார்.
தற்போது மாவட்டச் செயலாளராக கடமையாற்றும் கலாமதி பத்மராஜா பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சிற்கு உடனடியாக அமுலாகும் வகையில் இணைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கருணாகரன் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.