மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கை; முதலமைச்சர் வெளியீடு

தமிழகத்தில் மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கையை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மின்னணு துறைக்கான தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

முதலீடுகளை ஈர்க்க மின்னணு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் வகையில் தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் பல வெளிநாடுகளில் வெளியேறும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க புதிய தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

5 மாதங்களில் 41 நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தம் மூலம் ரூ.30,664 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது. 67,212 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இவ்வாறு தொழிற்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.