வாட்ஸ் அப்பில் புது ஆப்ஷன்

இந்தியா: புது ஆப்ஷன் .... வாட்ஸ்அப் செயலில் வரும் அப்டேட்டுகளால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப்பில் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த அப்டேட்டுகளால் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவது மிகவும் எளிதாகி கொண்டு வருகிறது.

சமீப காலமாகவே வாட்ஸ் அப் செயலியானது குரூப்பில் தகவல்களை எளிதாக பரிமாற்றம் செய்ய தேவையான அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்தப்பட்டது.

எனவே அதன்படி ஆரம்பத்தில் 250 ஆக இருந்து வந்த குரூப் நபர்களின் எண்ணிக்கை தற்போது 1000க்கும் மேல் உயர்ந்துள்ளது. அதை தொடர்ந்து பல குரூப்களை ஒன்றிணைக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் Communities அம்சம் கொண்டு வரப்பட்டது.

இந்த வரிசையில் புதிதாக வாட்ஸ் குரூப்பில் வாக்கெடுப்பு நடத்தும் வகையில் Poll என்ற ஆப்ஷன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ் அப் குரூப்பில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு தலைப்பில் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு குரூப் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தலாம். எந்த ஆப்ஷனுக்கு எவ்வளவு வாக்குகள் என்ற விவரங்கள் திரையில் காட்டப்படும்.