மாநிலத்தில் புதிய மின் இணைப்பு மற்றும் மின்சார வழங்கல் விதிகள் குறித்த புதிய உத்தரவு

சென்னை : 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு .... தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆனது மின் புதிய மின் இணைப்புகளுக்கான பல்வேறு புதிய அறிவுறுத்தல்களையும் சமீப காலமாகவே வெளியிட்டு கொண்டு வருகிறது. மாநிலத்தில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டு வருகிறது.

முந்தைய அறிவிப்பின்படி புதிய மின் இணைப்புகளுக்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலித்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


மேலும் 60 நாட்களுக்குள் மின்கம்பம் மற்றும் 90 நாட்களுக்குள் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய அறிவிப்பின்படி மாநிலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய மின் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்து உள்ளது.

இதனால் புதிய மின் இணைப்புகளை 7 நாட்களுக்குள்ளாகவே வழங்க வேண்டும் என்றும், மீட்டர் பொருத்தாமல் புதிய மின் இணைப்புகளை வழங்கக்கூடாது மற்றும் மின்சார வழங்கல் விதிகளிலும் பல்வேறு திருத்தங்களை செய்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆனது உத்தரவிட்டு உள்ளது.