புதிய போக்குவரத்து விதிகள் அமல்

சென்னை: மோட்டார் வாகன விதிகளின்படி சாலைகளில் வாகனத்தில் செல்லும் போது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளை தடுக்கின்ற வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டு வந்தது. இது தமிழ்நாட்டில் தற்போது அமல்படுத்தப்படுகிறது. எனவே அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் பயணிக்கும் பயணிப்போர் மீத்ம் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது . இது வாடகை கார் ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொருந்தாதும் என கூறப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் , அரசின் அவசரப் போக்குவரத்திற்கு வழி விடாத நபர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து வீதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.


இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்றால் அபராத தொகை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே தவறை மீண்டும் செய்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. வாகன பந்தயத்தில் ஈடுபட்டால் 1500 ரூபாய் முதல் வசூலிக்கப்பட்ட அபராத தொகை இனிமேல் 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

வாகனங்களில் லைசென்ஸ் மாடிஃபிகேஷன் செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். சிக்னல் விதிகளை மீறி போவதற்கு இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த 100 ரூபாய் இனிமேல் ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மியூசிக்கல் மற்றும் ஏர் ஹாரனை பயன்படுத்துவதற்கு அபராத தொகை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

பதிவு செய்யப்படாத வாகனங்களை இயக்கினால் 2500 ரூபாய் முதல் 5000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் என்றும் விதிக்கப்பட்டது. இனிமேல் 5000 ரூபாயாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாயாக 2000 இரண்டாம் முறை பத்தாயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் 500 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது ஐநூறு ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது இனிமேல் 500 ரூபாய் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது வழக்கு பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.