சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவுநேர புறநகர் ரயில்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ரத்து


சென்னை: 3 நாட்களுக்கு கடற்கரை- தாம்பரம் இரவு நேர ரயில் சேவை ரத்து ....சென்னை பரங்கிமலை வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இரவு 10.20, 10.40, 11.5, 11.30 மணிக்கு புறப்படும் கடற்கரை- தாம்பரம் புறநகர் ரயில், இரவு 10.40, 11.20-க்கு புறப்படும் தாம்பரம்- கடற்கரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இரவு 10.10-க்கு புறப்படும் செங்கல்பட்டு- சென்னை கடற்கரை புறநகர் ரயிலும் நாளை முதல் ரத்து செய்யபட்டுள்ளது.

இதனை அடுத்து பரங்கிமலை ரயில் நிலையம் அருகே இரும்புப்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் நிலையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான மின்சார ரயில் சேவை நேற்று காலை 10.20 மணி முதல் மதியம் 2.45 மணி வரை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.