உயர்நிலை பாடசாலை மாணவர்களும் தகுதி பெற்றதாக அறிவிப்பு

கல்வி அமைச்சர் தகவல்... ஒன்றாரியோவின் பணவழங்கல் ஆதரவு திட்டத்திற்கு உயர்நிலைப் பாடசாலை மாணவர்களும் தகுதிபெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2021 இல் ஒன்றாரியோ முழுவதும் உள்ள பாடசாலைகள் தொலைநிலைக் கற்றலுக்கு மாறும்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது. முன்னதாக, இந்த நன்மை 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே தகுதியானது. சிறப்புத் தேவைகளைக் கொண்ட 21 வயது வரை சார்ந்தவர்கள் 250 டொலர்களுக்கு தகுதியுடையவர்கள்.

பெற்றோர்கள் தொடக்க, நடுநிலை அல்லது உயர்நிலைப் பாடசாலையில் சேர்ந்த ஒவ்வொரு குழந்தைக்கும் அல்லது சிறப்புத் தேவைகளுடன் 21வயது வரை சார்ந்து இருக்கும் எந்தவொரு குழந்தைக்கும் 200 டொலர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம் நிலை மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 11ஆம் திகதி திறக்கப்படும். மேலும் விண்ணப்பங்களுக்கான காலக்கெடு பெப்ரவரி 8ஆம் திகதி 2021 ஆகும்.