ஓக்வில்லில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்தார்

கனடா: ஓக்வில்லில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளதாக ஹால்டன் பிராந்திய போலீஸார் தெரிவிக்கின்றனர். பெல்ட் லேன் மற்றும் லிட்டில்பீல்ட் வீதியில் இந்த்த இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த இருவரும் சுமார் 20 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் ஆண் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பெண் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஒரு வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் போலீஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.