பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது

சென்னை: பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இதுவரை மட்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளன.

சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுயிருந்தது. இதனை அடுத்து மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பொறியியல் கல்லூரிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு 2,11,417 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் இந்தாண்டு 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளன. கடந்தாண்டு மாணவர்களின் எண்ணிக்கையை இந்தாண்டும் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.