மணிமுத்தாறு அருவியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்... குளிக்க தடை விதிப்பு

அம்பை: மணிமுத்தாறு அருவியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மணிமுத்தாறில் நேற்று காலை வரை 22.8 மி.மீ மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.75 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 264 கன அடி தண்ணீர் வருகிறது.

வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.