டெல்லியில் மெட்ரோ ரயில்களில் மதுபாட்டில்கள் எடுத்துச் செல்ல பயணிகளுக்கு அனுமதி

டெல்லி: மதுபாட்டில் எடுத்துச் செல்ல அனுமதி... டெல்லியில் மெட்ரோ ரயில்களில் மதுபாட்டில்கள் எடுத்துச் செல்ல பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் மெட்ரோ அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு பயணி இரண்டு சீலிடப்பட்ட மது பாட்டில்களை எடுத்துச் செல்லலாம் என்றும், அதே நேரத்தில் ரயில்கள் மற்றும் மெட்ரோ வளாகங்களில் மது அருந்த தடை நீடிப்பதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குடிபோதையில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.