பட்டாசு விற்பனை களத்தில் குதித்துள்ள போலி இணையதளங்கள் குறித்த எச்சரிக்கை ..மக்களே உஷார்


சென்னை: தீபாவளி பண்டிகை என்றதும் முதலில் பட்டாசு தான் அனைவரின் நினைவுக்கும் வரும். இதையடுத்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தீபாவளி தினத்தில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வார்கள்.

இந்திய தயாரிப்பு பட்டாசுகளுடன் அதிக அளவில் சீன தயாரிப்பு பட்டாசுகளும் விதவிதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சைபர் கிரைம்


அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி போலி இணையதளங்கள் மூலம் மிகவும் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடிகள் நடந்து வருவதாகவும், இது பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறைந்த விலையில் கிடைக்கும் பட்டாசுகள் குறித்த சமூக வலைதள விளம்பரங்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர்.