மெட்ரோ ரயில்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு பயணம் செய்த மக்கள்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. தீபாவளி கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு 20, 21, 22 ஆகிய தேதிகளில் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. கூடுதல் இயக்கப்படும் சேவைகள் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 21-ந்தேதி (சனிக்கிழமை) அதிகபட்சமாக 2 லட்சத்து 63 ஆயிரத்து 610 பேர் பயணம் செய்தனர். 20ம் தேதி 2 லட்சத்து 48 ஆயிரத்து 556 பேர் பயணம் செய்தனர்.


2 நாட்களில் மொத்தம் 5 லட்சத்து 12 ஆயிரத்து 166 பேர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுவே அதிக பயணிகளின் எண்ணிக்கை என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.