மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடல்

சென்னை : கடந்த பிப்ரவரி மாதம் முதல் எச் 3, என் 2 உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் மக்களிடையே அதிகம் பரவி கொண்டு வருகிறது. இந்த வைரசால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து தற்போது தமிழகத்தில் குளிர் தணிந்து வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது.இந்த காலநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல், உடல் வலி ஆகிய தொந்தரவுகள் தென்படுகிறது. அத்துடன் இந்த காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாகவும் பரவுகிறது. திடீரென பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே குரங்கம்மை, கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த வைரஸ் காய்ச்சல் மக்களை மீண்டும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் வரும் 10-ம் தேதி தமிழகத்தில் சுமார் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.