தீபாவளி பண்டிகையையொட்டி இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்க திட்டமிடல்

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கார்டு காரர்களுக்கு இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு கொண்டு வருகிறது.

இதையடுத்து தற்போதைக்கு ரேஷன் கடைக்காரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், 2 கிலோ சர்க்கரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ரூ. 25க்கு வழங்கஉள்ளதாக அறிவிக்கப்பட்டுவுள்ளது. இதற்கு இடையே, தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்திற்கு என 8500 டன் கோதுமை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் விற்பனை களைக்கட்டும் என்பதனால் நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும் என கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக துவரம் பருப்பு மற்றும் கோதுமையை இருப்பில் வைத்திருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், தனியார் நிறுவன பொருட்களும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி கொண்டு வருகின்றனர். எனவே, பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்கக் கூடாது என்று கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டுள்ளது.