வாரணாசிக்கு இன்று வருகை புரிகிறார் பிரதமர் மோடி

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

450 கோடி ரூபாய் செலவில் 30 ஏக்கர் பரப்பளவில் இந்த மைதானம் கட்டப்பட உள்ளது. அடித்தட்டு தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உத்தரப் பிரதேச அரசு சார்பில் 1,115 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 18 உண்டு உறைவிடப் பள்ளிகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து காசி சன்சத் சான்ஸ்கிருதிக் மகோத்சவ் விழாவிலும் மோடி பங்கேற்க உள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி வாரணாசியில் வீடுகள்தோறும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வாரணாசி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.