போராட்டத்திற்கு வந்த சர்திளா ரெட்டியை காருடன் கிரேன் வைத்து தூக்கிய போலீசார்

ஆந்திரா: ஆந்திராவில் ஏற்பட்ட அதிர்ச்சி... முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.


ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்தி வருகிறார்.இதற்கிடையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லம் முன்பு ஷர்மிளா ரெட்டி காரில் புறப்பட்டு போராட்டம் நடத்தினார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கிரேன் கொண்டு வந்தனர். இதையடுத்து, ஷர்மிளா காரில் அமர்ந்திருந்தபோது, போலீசார் கிரேன் மூலம் காரை தூக்கினர்.


அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களும் காரை பின்தொடர்ந்து ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.