சென்னை ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு சோதனை

பாதுகாப்பு சோதனை... பண்டிகை காலத்தையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

பண்டிகை காலங்களில் அதிகளவில் மக்கள் வெளியூர் செல்வர் என்பதால் இந்த சோதனை நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆர்.கே.சிங் தலைமையில் காவல் ஆய்வாளர், வெடிகுண்டு தடுப்பு படையினர், மோப்ப நாய் உதவியுடன் 30க்கும் மேற்பட்ட ரயில்வே காவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கொரோனா காலத்தில் நடைபெறும் பாதுகாப்பு சோதனை என்பதால் பயணிகளுக்கான இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்ட்டது.

மேலும் ரயில் பெட்டிகளில் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன.