பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி பேசிய கன்னி உரை... பாராட்டுக்களை குவித்தது

பிரிட்டன்: பாராட்டுக்களை பெற்ற உரை... பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, தமது கணவர் சார்ந்துள்ள பழமைவாத கட்சி மாநாட்டில் நிகழ்த்திய கன்னி உரை அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பார்வையாளர்கள் வரிசையில் ரிஷி சுனக் அமர்ந்திருந்தபோது மேடையேறிய அக்ஷதா, தமது கணவரே தமது சிறந்த நண்பர் என்று குறிப்பிட்டு பேச்சை தொடங்கினார்.

தானும் ரிஷியும் கல்லூரியில் படிக்கும் போது 24 வயதில் பழகத் துவங்கியதாக குறிப்பிட்ட அக்ஷதா, அப்போதே பிரிட்டன் மீது மிகுந்த பற்றுக் கொண்டு ரிஷி சுனக் பேசியதை நினைவுகூர்ந்தார்.

அக்ஷதா மூர்த்தி உரையை முடித்து கொண்டு திரும்பியபோது மேடையேறிய ரிஷி சுனக், மனைவியை கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்தார்.