பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் நன்றி தெரிவிப்பு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி அவர்கள் பாராட்டு தெரிவித்தார் . 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.

மேலும் உலகெங்கிலும் இருந்து இப்போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள். என அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; உங்கள் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி.விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத 2 குணங்கள்.

மேலும் இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழகத்திற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.