இலங்கிலாந்து ராணியின் வியக்க வைக்கும் இறுதிசடங்கு செலவுகள்

லண்டன் : இங்கிலாந்து ராணியின் இறுதி சடங்கிற்கு சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக செலவாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து ராணி தனது எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டது. அதுவும் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர்.

வரும் 19-ம் தேதி அன்று ராணியின் உடல் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு வருகை தரவுள்ளனர்.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கைப் பாதுகாப்பது ஐக்கிய ராஜ்ஜிய வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒற்றை நாள் நடவடிக்கையாகும், இதற்காக சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க லாடருக்கும் அதிகமாக செலவாகும் என தெரிகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 59 கோடி ஆகும். வரும் திங்களன்று நடைபெறும் இறுதிச் சடங்கில், இங்கிலாந்து காவல் துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும்.

வில்லியம் மற்றும் கேட்டின் 2011 திருமணத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது. திருமணத்திற்கான காவல்துறை செலவுகள் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என்று முன்னாள் ராயல் பாதுகாப்பு அதிகாரியான சைமன் மோர்கன் தெரிவித்துள்ளார். சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.