அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை வேத மந்திரங்கள் முழங்க ஆரம்பம்

அயோத்தியில் இன்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டு, ராம ஜென்ம பூமியில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார். பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, இன்று காலை ஹெலிகாப்டர் மூலமாக அயோத்தி வந்தடைந்தார். அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, தனிமனித இடைவெளியுடன் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அயோத்தி வந்த பிரதமர் மோடி முதலில் அங்குள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு செய்தார். அதன்பின், ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை வழிபட்டார். பின்னர் அதற்கு பிரதமர் மோடி, பூஜைகளையும் செய்தார். பூஜை முடிந்தபின், கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.

பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் வருகை தந்ததையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை தொடங்கியது. மாஸ்க் அணிந்தவாறு பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த பூமி பூஜையில் பங்கேற்றனர்.