வரும் நவ.10 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்


சென்னை: தமிழகத்தில் பொதுவாக இரண்டாவது, நான்காவது வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் 2-வது, 4-வது வெள்ளிக்கிழமை இருக்கும் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலைநாளாக இருக்கும். இந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடுமையான வேலைப்பளு ஏற்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் தேவைக்காக இந்த வார வரும் நவ.5 ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தீபாவளி பண்டிகையையொட்டி இம்மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை நவ.10 ஆம் தேதியும் ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக, ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் உணவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.