முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் வெளியீடு

சென்னை: 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை ... தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று நேற்று முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது.


இதில் முதற்கட்ட கலந்தாய்வு பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதையடுத்து அதில் 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை எனவும், 20 கல்லூரிகளில் மட்டும் 50 சதவீத மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் தற்போது வரை தமிழகத்தில் உள்ள 440 கல்லூரிகளில் 1,45,071 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளன.