சதை உண்ணும் பாக்டீரியாக்கள் பரவி வருவதாக கூறப்படும் தகவலால் அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்கா: அமெரிக்க மக்களை ஆட்டம் காண வைக்கும் பாக்டீரியா... சதை உண்ணும் பாக்டீரியாக்கள் பரவி வருவதாகவும், பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டே நாட்களில் இறந்துவிடுவதாகவும் வெளியான தகவலால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற கொடிய பாக்டீரியா மிக வேகமாக பரவி வருவதால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிரு நாட்களில் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்த பாக்டீரியாக்கள் சதை உண்ணும் திறன் கொண்டவை. எனவே அவை மாமிச பாக்டீரியா என்று அழைக்கப்படுகின்றன. 1988 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், இந்த பாக்டீரியா அமெரிக்காவில் பரவியது மற்றும் 159 பேர் இறந்தனர்.

தற்போது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சதை உண்ணும் பாக்டீரியாக்கள் அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.