அரிசி வாங்கும் குடும்ப அட்டைகளுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு

ரூ.2500 பொங்கல் பரிசு... பொங்கல் பரிசாக குடும்ப .அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி வாங்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலையில் அம்மா மினி கிளினிக்கை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இதன்பின்னர் மக்களிடையே உரையாற்றினார். இந்த உரையின் போது, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பணம் வழங்கப்படும். ஒரு முழு கரும்பு, அரிசி, வெல்லம், உலர் திராட்சை வழங்கப்படும்.

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பும் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு மற்றும் ரூ.2500 பணம் பெற்றுக்கொள்ளலாம். இதனால் தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 இலட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொங்கல் பரிசு பண்டிகைக்கு ரூ.1000 பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2500 பணம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.