ஓட்டுனர்களுக்கு ரூ.1000 வதந்தி... மாநில போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ஓட்டுனர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தது. இது ஓட்டுநர்கள் மத்தியில் வைரலாக பரவியது.

இந்நிலையில் ஓட்டுநர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் போலியானது என மாநில போக்குவரத்து ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

விஏஓ அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் ஓட்டுநர்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு ரூ.1,000 வரவு வைக்கும் என வதந்தி சமீப காலத்தில் சமூக வலை தளங்களில் பரவியது.

இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்தார்.