இலவச பயணம் குறித்து வெளியானது வதந்தி... அமைச்சர் விளக்கம்

சென்னை : விளக்கம் கொடுத்த அமைச்சர்... பேருந்துகளில் இலவச பயணத்தை விரும்பாத பெண்கள், காசு கொடுத்து பயணிக்கலாம் என்ற தகவல் வெளியானது. இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி, ” பெண்கள் ஓசி-யில் பயனக்கிறீங்க”; என்று பேசியது சர்ச்சையானது. இதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் என்ற மூதாட்டி ” நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என்று சொல்லி கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்த சம்பவம் பூதாகாரமானது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் சிலர் இலவசமாக பயணிக்க விரும்பாமல் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து டிக்கெட் வாங்கி பயணித்தனர். இந்நிலையில், இச்சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பை வாய்மொழியாக வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

அதில், அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என்று மகளிர் விரும்பினால், பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என்று அனைத்து நடந்துநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.


இந்நிலையில், பெண்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி எனவும், பெண்களின் இலவச பயண பேருந்து திட்டம் தொடரும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: ” தமிழகத்தில் இலவச பேருந்து பயணத்திட்டம் தொடரும். மக்களுக்கு பயன் தரும் இந்த திட்டம் தொடரும். கட்டணம் செலுத்தலாம் என்பது வதந்தி,” எனக் கூறியுள்ளார்.