சமயபுரம் கோயில் தேரோட்டம்... போக்குரவத்தை சீரமைக்க கோரிக்கை

திருச்சி: சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நடைப்பயணம் மற்றும் வாகனங்கள் மூலமாக பூக்களை தட்டுகளில் ஏந்தி மாரியம்மனுக்கு சாற்றுவார்கள்.

இதே போன்று ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் பூச்சொரித்தல் விழா நடைபெறும். இவ்விழாவிற்காக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தாங்கள் இருப்பிடத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பல மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..