பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு: ஜனாதிபதியுடன் சந்திப்பு... உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் டுவிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

மின்தடை: எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாட்களில் மதியம் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.