செப். 27 (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி : மின்தடை ... தமிழகத்தில் வருகிற செப். 27 (செவ்வாய்க்கிழமை) திருச்சி மாநகரில் சில பகுதிகள், திருவானைக்கா, சிறுகனூர் பகுதிகளில் மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் தென்னுர் நகரியம் பா. சண்முகசுந்தரம், ஸ்ரீரங்கம் ஆர். செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.

அதில் திருச்சி மாவட்டம் நகரியக் கோட்டம், மலைக்கோட்டை பிரிவுக்கு உட்பட்ட கீழரண்சாலை, பெரியக்கடைவீதி, சூப்பர் பஜார், ஆனந்த் அவென்யூ, சின்னக்கடைவீதி, என்.எஸ். பி. சாலை, சிங்காரத்தோப்பு, பாபுசாலை, காசிப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள உயரழுத்த மின்பாதையில் பணிகள் நடைபெற இருப்பதால் செப் 27 காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று திருவானைக்கா, சிறுகனூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, சன்னதி தெரு, சீனிவாசநகர், வடக்கு, தெற்கு உள்வீதிகள், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கர் நகர், பஞ்சக்கரை சாலை, அருள்முருகன் கார்டன் , ஒத்த தெரு, ஏயுடீ நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, கும்பகோணத்தான் சாலை, சிவராம் நகர், மேல, கீழ, நடுக் கொண்டையம்பேட்டை, சென்னை புறவழி சாலை, கல்லணை சாலை, தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவாளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு ஆகிய இடங்களிலும் செப். 27 மின் விநியோகம் நிறுத்தப்படும்

மேலும் சிறுகனூர். ஆவாரவள்ளி, திருப்பட்டூர், சி. ஆர். பாளையம், எம். ஆர். பாளையம், சனமங்கலம். மனியங்குறிச்சி, வாழையூர், நெய்குளம், நெடுங்கூர், நம்புக் குறிச்சி, ஊட்டத்தூர், பி. கே, அகரம், ரெட்டிமாங்குடி, ஜி. கே. பூங்கா, ஸ்ரீதேவிமங்கலம், கூத்தனூர், கொளக்குடி, கண்ணாக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.