மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்டு இலவசமாக வழங்கும் சீரம் நிறுவனம்

புதுடெல்லி: இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) 2 கோடி டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது.

இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பிரகாஷ்குமார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சீரம் நிறுவனம் 2 கோடி டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்க உள்ளது. இந்த இலவச கொரோனா தடுப்பூசியின் மொத்த மதிப்பு ரூ.410 கோடி என்று கூறப்படுகிறது.

சீனா, தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக சீரம் நிறுவனம் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளது.