நேபாளத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம்

காத்மண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இன்று காலை சுமார் 7.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி உள்ளது. இதனால், நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன. இதை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது.

இதனால், சில பகுதிகளில் வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பு தேடி தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

எனினும் இந்நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இதுவரை உடனடியாக வெளிவரவில்லை.