வடகொரியாவுக்கு தென் கொரியா விடுத்த கடும் எச்சரிக்கை

தென் கொரியா: கடும் எச்சரிக்கை விடுத்த தென் கொரியா... அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் வடகொரிய அரசை அழித்து விடுவோம் என்னு தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரிய அரசு அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து முடிவு கட்டிவிடுவோம் என தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் எச்சரித்துள்ளார்.

அந்நாட்டின் 75வது ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் நடத்தப்பட்ட பிரமாண்ட அணிவகுப்பில் அதிநவீன ஏவுகணைகள், டிரோன்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

தென் கொரியாவில் 28 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களில் 300 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்