வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினம் .. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வருகிற ஆக.12 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவிப்பு .... வார இறுதி நாட்களான ஆகஸ்ட் 12,13 மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.


மேலும் சென்னையில் இருந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும். கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களிலிருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து பெங்களூருவில் இருந்து 400 பேருந்துகள் என மொத்தம் 1,100 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பயணம் மேற்கொள்ள இதுவரை 12,257 பயணிகள் முன்பதிவு செய்து உள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.