மாவோயிஸ்ட்கள் 10 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்

தெலுங்கானா: அதிரடிப்படையினர் நடவடிக்கை... தெலுங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் 10 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்துள்ளனர்.

தந்தேவாடாவில் கடந்த மாதம் நடத்தியது போன்ற பெரிய அளவிலான தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள், 500 டெட்டனேட்டர்கள், 300 பண்டல் வயர்கள், 600 வெடிமருந்து குச்சிகளுடன், டிராக்டர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.