சிறப்பு ரயில் ... முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ள நிலையில் முன்பதிவு இன்று தொடக்கம் ..... பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரம் - நெல்லை இடையை இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

இதையடுத்து ஜனவரி 14- ம் தேதி சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கும் , ஜனவரி 18- ம் தேதி நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.ஜனவரி 14-ம் தேதி இரவு 10:20 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்புரையில் மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்று அடையும்.

அதைத்தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதி மாலை 5:50 மணிக்கு நெல்லை சந்திப்பில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும். சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம்

இதனை அடுத்து திருச்சி ,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ,கோவில்பட்டி வழியாக நெல்லை செல்கிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.